
இயக்குநர்கள் எல்லாம் மேக்கப் போட ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் நடிகர்கள் இயக்குநராவது என்பது எப்போதாவது ஒருமுறை தான் நிகழ்கிறது.
காரணம் நடிப்பதை விட படம் இயக்குவது என்பது பல வேலைகளைத் தூக்கி தலையில் போட்டுக் கொண்டு அலைவதைப் போன்றது. இவ்வளவு சுமைகள் இருந்தாலும் தன்னை இயக்குநராக பார்ப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார் சூர்யா. ‘இயக்குநராகவேண்டும்... புகழ் பெற்ற முன்னணி இயக்குநராக உருவாக வேண்டும்’ என்று ஆசைப்படுகிறார் நடிகர் சூர்யா. அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் நாலு படங்களை இயக்கி இந்தியாவின் முன்னணி இயக்குநராகி விடவேண்டும் என்ற ஆசை சூர்யா மனதில். அவருக்கு ஏன் இப்படி ஒரு விபரீத ஆசை? என்பது யாருக்கும் புரியாத கதை.
No comments:
Post a Comment